சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை மற்றும் ஓய்வு எடுத்து வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10நாட்களுக்கு பிறகு நாளை மீண்டும் கோட்டைக்கு (தலைமைச் செயலகம்) வருகை தருகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்க திடீரென தலைச்சுற்று ஏற்பட்டதால், ஜூலை 21ந்தேதி அன்று காலை சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவருக்கு அப்போலோ மருத்துவமனையில் கேன்சர் உள்பட பல்வேறு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் இதயம் தொடர்பான ஆஞ்சியோ பரிசோதனையும் செய்யப்பட்டது.
இதற்கிடையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த போது அங்கிருந்தபடியே அரசு பணிகளை கவனித்தார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களுக்கு வந்திருந்த பொதுமக்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். தலைமை செயலாளர் முன்னிலையில், மாவட்ட கலெக்டர்களிடமும் கேட்டறிந்தார். பின்னர் சிகிச்சை முடிந்து ஜூலை 27ந்தேதி வீடு திரும்பினார். அவர் மேலும் 3 நாட்கள் ஓய்வு எடுத்த பிறகு பணிகளை கவனிக்கலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில், சுமார் 10 நாட்களுக்கு பிறகு, அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மீண்டும் தலைமைச்செயலகம் வருகை தருகிறார். நாளை மதுல் வழக்கமான பணிகளை மேற்கொள்ள உள்ளார்.
தலைமைச் செயலகத்தில் நாளை காலை நடக்கும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். பல்வேறு துறைகளின் முடிவுற்ற திட்டங்களை முதலமைச்சர் நாளை திறந்து வைக்கிறார்.