மயிலாடுதுறை: சுந்தரா டிராவல்ஸ் பேருந்தில் இருந்து புகை வருவது போல இ.பி.எஸ். வாயிலிருந்து பொய் வருகிறது  மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்தார்.

தமிழக மக்கள் தொடர்ச்சியாக இ.பி.எஸ்.க்கு டாடா, பை – பை சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றனர்.

 மயிலாடுதுறையில் ரூ.48 கோடியில் 47 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கிய வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.113.51 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி அடைந்துள்ளது என கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் என்மேல் அன்பு மழை பொழிந்தனர். மயிலாடுதுறை மாவட்டத்துக்கு திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர்,   விமர்சனம் என்கிற பெயரில் நமக்காக விளம்பரம் செய்யும் இ.பி.எஸ்-க்கு நன்றி என கூறியவர்,  எடப்பாடியின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

தேர்தலுக்கு முன் பெட்சீட் போட்டு வாங்கிய மனுக்களை எக்ஸல் ஷீட்டாக மாற்றி வொர்க் ஷீட்டாக மாற்றினேன் என்று கூறியதுடன்,  மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட தி.மு.க. அரசின் அனைத்து திட்டங்களும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களையும் சென்றடைகிறது என்று சுட்டிக்காட்டினார்.

தமிழக மக்கள் தொடர்ச்சியாக இ.பி.எஸ்.க்கு டாடா, பை – பை சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றனர், அதனால் என்ன பேசுவது என்று தெரியாமல்,  சுந்தரா டிராவல்ஸ் பேருந்தில்  இருந்து வெளிவரும்புகைப்போல, அவரது வாயில் இருந்து பொய் வந்துகொண்டிருக்கிறது, தமற்போது, சுந்தரா டிராவல்ஸ் போல் ஒரு பேருந்தை எடுத்துக்கொண்டு கிளம்பியிருக்கிறார் என்றார்.

உங்கள் குடும்ப நலனுக்காக டெல்லி சென்று அ.தி.மு.க.வை அடகுவைத்தவர் எடப்பாடி பழனிசாமி என்று கூறியவர்,  ரெய்டில் இருந்து குடும்பத்தை காக்கவே இ.பி.எஸ். அமித்ஷா வீட்டின் கதவை தட்டினாரே தவிர நமது மக்களுக்காக அல்ல.

சொந்த கட்சியினரான அ.தி.மு.க.வினரே எடப்பாடி பழனிசாமியை நம்பாதபோது தமிழக மக்கள் எப்படி நம்புவர்?  என கேள்வி எழுப்பிய ஸ்டாலின்,   குடும்பத்தை காப்பாற்ற டெல்லியின் சதுரங்க வேட்டையில் சிக்கி தொண்டர்களை ஏமாற்றினார்  என்றவர்,  தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள் அ.தி.மு.க.-வினர் வீட்டுக்கும் போவதை இ.பி.எஸ்.-ஆல் மறுக்க முடியுமா? என கேட்டார்.

மேலும்,  உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து இ.பி.எஸ். அவதூறு பரப்பி வருகிறார்.  நம்மை ஒருபோதும் ஸ்டாலின் கைவிட மாட்டார் என தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்று கூறியதுடன்,  தமிழகத்தில் அடுத்து அமைய போவதும் திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் என்பதை உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார் .