சென்னை: ‘மக்களை காப்போம்’ ‘தமிழகத்தை மீட்போம்’ என்று தொகுதிவாரியாக பிரசாரத்தை மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி வரும் 24ந்தேதி ( ஜூலை 24-ம் தேத) முதல் தனது 2வது கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, 2026 தேர்தலை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டங்களை அறிவித்து வருகிறது. மேலும், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மக்களை காப்போம்’ ‘தமிழகத்தை மீட்போம்’ என்று தொகுதிவாரியாக முதல்கட்ட பிரசாரத்தை முடித்துள்ளார்.

அதாவது, ஜூலை 7-ம் தேதி கோவை மேட்டூப்பாளையத்தில் முதல்கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை பழனிசாமி கோவையில் தொடங்கிய நிலையில், தொகுதிவாரியாக பிரச்சாரம் செய்துவருகிறார்., செல்லும் வழிகளில், ஆங்காங்கே அதிக அளவில் ஒரே தொழிலை செய்யும் நெசவாளர்கள், விவசாயிகள், குறு, சிறு, நடுத்தர தொழில் செய்வோர் உள்ளிட்டோரை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டு வருகிறார். அப்போது மீண்டும் 2026ல் ஆட்சிக்கு வந்ததும், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறுவதுடன், பெண்களுக்கு உரிமை தொகையாக ரூ.1500 வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அவரது முதற்கட்ட பிரச்சாரம் வரும் 33 தொகுதிகளில் ஜூலை 21-ம் தேதியுடன் முடிவடைகிறது
இதையடுத்து, 2-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை ஜூலை 24-ம் தேதி தொடங்கி, 36 தொகுதிகளுக்கு செல்வதாக அதிமுக தலைமை அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி 2-ம்கட்ட பிரச்சார பயணத்தை ஜூலை 24-ம் தேதி தொடங்கி, ஆக.8-ம் தேதி நிறைவு செய்ய உள்ளார்.
இதன்படி, 24-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி தொகுதிகளிலும்,
25-ம் தேதி விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம் தொகுதிகளிலும்,
26-ம் தேதி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை தொகுதிகளிலும், 30-ம் தேதி மானாமதுரை, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, திருவாடணை ஆகிய தொகுதிகளிலும்,
31-ம் தேதி ராமநாதபுரம், முதுகுளத்தூர், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஆகிய தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
ஆகஸ்டு 1-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி,
ஆகஸ்டு 2-ம் தேதி திருச்செந்தூர், வைகுண்டம், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், 4-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, திருநெல்வேலி, 5-ம் தேதி அம்பாசமுத்திரம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம், தென்காசி தொகுதிகளில் பயணம் மேற்கொள்கிறார்.
ஆகஸ்டு 6-ம் தேதி தென்காசி மாவட்டம் கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி,
ஆகஸ்டு 8-ம் தேதி சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
2-ம்கட்ட பிரச்சாரத்தில் மொத்தம் 36 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்ய உள்ளார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.