சென்னை: முழு​மை​யான கட்​டமைப்பு வசதி​கள் இல்​லாத​ 141 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது. இது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில், பொறியியல் படிப்புக்களுக்கா கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாத 141 41 பொறி​யியல் கல்​லூரி​களுக்கு விளக்​கம் கேட்டு அண்ணா கலைக்​கழகம் நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ள​து, மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கட்டமைப்பு வசதிகள் இல்லாத பொறியியல் கல்லூரிகள் கவுசிலிங்கில் எப்படி இடம்பெற்றுள்ளது என கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

 தமிழகத்​தில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின்​கீழ் 460-க்​கும் மேற்​பட்ட பொறி​யியல் கல்​லூரி​கள் இயங்கி வரு​கின்​றன. இந்த கல்​லூரி​கள் ஆண்​டு​ தோறும் தங்​களின் இணைப்பு அங்​கீ​காரத்தை அகில இந்​திய தொழில்​நுட்ப கல்விக் குழு​மம் (ஏஐசிடிஇ) மற்​றும் அண்ணா பல்​கலைக்​கழகத்​திடம் புதுப்​பித்​துக் கொள்ள வேண்டும். அந்​தவகை​யில் நடப்பு கல்​வி​யாண்டு (2025-26) அண்ணா பல்​கலைக்​கழகத்​தில் இணைப்பு அங்​கீ​காரம் கோரி விண்​ணப்​பித்த கல்லூரி​களின் கட்​டமைப்பு வசதி​கள், ஆவணங்​கள் சரி​பார்ப்பு உட்பட பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன.

இதில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் விதி​முறை​களை பூர்த்தி செய்​யாத 141 கல்​லூரி​களுக்கு விளக்​கம் நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ள​தாக தகவல்​கள் வெளியாகி​யுள்​ளன. இதுகுறித்து விளக்கம் கேட்டு  அண்ணா பல்​கலைக்​கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்​கலைக்​கழக அதி​காரி​கள்  கூறும்​போது, “141 கல்லூரிகளில் பேராசிரியர் பற்​றாக்​குறை, நூல​கங்​கள், ஆய்​வகங்​கள் குறை​பாடு போன்ற பல்​வேறு கட்​டமைப்பு வசதி​கள் முழு​மை​யாக இல்​லை. இந்த கல்​லூரி​கள் குறை​பாடு​களை 45 நாட்​களுக்​குள் சரி செய்ய வேண்​டும். அதைத் தொடர்ந்து நேரில் ஆய்வு செய்த பின்​னரே இணைப்பு அங்​கீ​காரம் உறுதி செய்யப்படும்” என்​றனர்.

இதனிடையே, பொறி​யியல் படிப்​பு​களுக்​கான பொதுப்​பிரிவு கலந்​தாய்வு இன்று தொடங்​கி உள்ள சூழலில், அண்ணா பல்​கலை.​யின் நடவடிக்​கை​யால் மாணவர்​கள், பெற்​றோர்​ கவலை​யில் ஆழ்ந்​துள்​ளனர்.

கல்​லூரி​யின் சேர்க்கை பெற்​றபின் அதற்​கான அங்​கீ​காரம் ரத்து செய்​யப்​பட்​டால் மாணவர்​களின் எதிர்​காலம் பாதிக்கும். எனவே, நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்ள சம்​மந்​தப்​பட்ட கல்​லூரி​களின் பட்​டியலை வெளி​யிட கல்​வி​யாளர்​கள் கோரியுள்ளனர்.