சென்னை

ண்ணா பல்கலைக்​கழகம் முழு​மை​யான கட்​டமைப்பு வசதி​கள் இல்​லாத​ 141 பொறி​யியல் கல்​லூரி​களுக்கு விளக்​கம் கோரி நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​​ளது

அண்ணா பல்​கலைக்​கழகத்​தின்​கீழ் தமிழகத்​தில் இயங்கி வரும் 460-க்​கும் மேற்​பட்ட பொறி​யியல் கல்​லூரி​கள் ஆண்​டு​ தோறும் தங்​களின் இணைப்பு அங்​கீ​காரத்தை அகில இந்​திய தொழில்​நுட்ப கல்விக் குழு​மம் (ஏஐசிடிஇ) மற்​றும் அண்ணா பல்​கலைக்​கழகத்​திடம் புதுப்​பித்​துக் கொள்ள வேண்டும். நடப்பு கல்​வி​யாண்டு (2025-26) அண்ணா பல்​கலைக்​கழகத்​தில் இணைப்பு அங்​கீ​காரம் கோரி விண்​ணப்​பித்த கல்லூரி​களின் கட்​டமைப்பு வசதி​கள், ஆவணங்​கள் சரி​பார்ப்பு உட்பட பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டதில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் விதி​முறை​களை பூர்த்தி செய்​யாத 141 கல்​லூரி​களுக்கு விளக்​கம் நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ள​தாக தகவல்​கள் வெளியாகி​யுள்​ளன.

அண்ணா பல்​கலைக்​கழக அதி​காரி​கள் இதுகுறித்து,

“141 கல்லூரிகளில் பேராசிரியர் பற்​றாக்​குறை, நூல​கங்​கள், ஆய்​வகங்​கள் குறை​பாடு போன்ற பல்​வேறு கட்​டமைப்பு வசதி​கள் முழு​மை​யாக இல்​லை. இந்த கல்​லூரி​கள் குறை​பாடு​களை 45 நாட்​களுக்​குள் சரி செய்ய வேண்​டும். அதைத் தொடர்ந்து நேரில் ஆய்வு செய்த பின்​னரே இணைப்பு அங்​கீ​காரம் உறுதி செய்யப்படும்”

என்​று தெரிவித்துள்ளனர்..

இன்று பொறி​யியல் படிப்​பு​களுக்​கான பொதுப்​பிரிவு கலந்​தாய்வு தொடங்​குவதால் அண்ணா பல்​கலை.​யின் நடவடிக்​கை​யால் மாணவர்​கள், பெற்​றோர்​ கவலை​யில் ஆழ்ந்​துள்​ளனர். கல்​லூரி​யின் சேர்க்கை பெற்​றபின் அதற்​கான அங்​கீ​காரம் ரத்து செய்​யப்​பட்​டால் மாணவர்​களின் எதிர்​காலம் பாதிக்கும். க்வே, நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்ள சம்​மந்​தப்​பட்ட கல்​லூரி​களின் பட்​டியலை வெளி​யிட கல்​வி​யாளர்​கள் கோரியுள்ளனர்.