சென்னை:   தலைநகர் சென்னையில்,  திரு​மலா பால் நிறுவன மேலா​ளர் மர்மமான முறையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்த   விவ​காரத்​தில் மாதவரம் குற்​றப்​பிரிவு காவல் ஆய்​வாளர் காத்திருப்போர் பட்​டியலுக்கு மாற்​றப்​பட்​டுள்​ளார்.  மேலும், கொளத்​தூர் துணை ஆணை​யர், பொள்ளாச்சி புகழ் பாண்டியராஜன் அன்​றாட பணி​களை மேற்​கொள்ள தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

ஆந்​திர மாநிலம், கிருஷ்ணா மாவட்​டம் வையூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் நவீன் பொலினேனி (37). திருமலா பால்’ நிறுவனத்தில்,ரூ.45 கோடி ரூபாய் மோசடி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட, கருவூல மேலாளர் நவீன் பொலினேனி கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாககிடந்தது கண்டறியப்பது. இதை சந்தேக மரணம் என காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சந்தேக மரணம் தொடர்பாக, கொளத்துார் துணை கமிஷனர் பாண்டியராஜனிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

நவீன் பொலினேனி  திரு​மண​மாகி குடும்​பத்​துடன் சென்னை புழல் அடுத்த பிரிட்​டானியா நகர், முதல் தெரு​வில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் வசித்து வந்​தார். இவர் சென்னை மாதவரம் காவல் நிலைய எல்​லைக்கு உட்​பட்ட பொன்​னி​யம்​மன்​மேட்​டில் உள்ள திரு​மலா பால் நிறு​வனத்​தில் கடந்த மூன்​றரை ஆண்​டு​களாக கரு​வூல மேலா​ள​ராக பணி​யாற்றி வந்​தார்.

இந்த ​நிலை​யில், அண்​மை​யில் திரு​மலா பால் நிறு​வனம் அவர்​களது நிறுவன வரவு- செலவு கணக்​கு​களை சரி​பார்த்து தணிக்கை செய்​துள்​ளது. அப்​போது, ரூ.40 கோடி முறை​கேடு நடந்​திருப்​பது தெரிய​வந்​தது. நவீன் அந்த பணத்தை கையாடல் செய்​த​தாக​வும், அந்த பணத்தை அவரது குடும்​பத்​தினர் மற்​றும் நண்​பரின் வங்கி கணக்​குக்கு மாற்றி மோசடி​யில் ஈடு​பட்​ட​தாக​வும் குற்​றம் ​சாட்டப்​பட்​டது.

இதுதொடர்​பாக அந்​நிறு​வனம் சார்​பில் கடந்த மாதம் 25-ம் தேதி கொளத்​தூர் காவல் மாவட்ட துணை ஆணை​யர் பாண்​டிய​ராஜனிடம் புகார் தெரிவிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, போலீ​ஸார் நவீனை நேரில் வரும்​படி கூறி போனில் அழைத்து விசாரித்ததாகவும், அப்​போது, ‘பணத்தை திருப்பி கொடுத்து விடு​கிறேன். என் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டாம்’ என போலீஸாரிடம் நவீன் கேட்​டுக் கொண்​ட​தாக​வும் கூறப்​படு​கிறது. இதுத​விர மேலும் சிலர் நெருக்​கடி கொடுத்​த​தாக​வும் தெரி​கிறது.

இந்த ​நிலை​யில், கடந்த புதன்​கிழமை இரவு அவர் வீட்​டருகே உள்ள குடிசை​யில் தூக்​கில் தொங்​கிய நிலை​யில் நவீன் சடலமாக கிடந்​தார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவரது கைகள் கட்டப்பட்டிருந்ததால், அவரால் எப்படி தற்கொலை செய்துகொள்ள முடியும் என்றும் கேளவி எழுந்தது.. தகவல் அறிந்து வந்த புழல் போலீ​ஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்​காக ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். போலீஸ் விசா​ரணைக்கு பயந்து நவீன் தற்​கொலை செய்து கொண்​டாரா அல்​லது யாரேனும் அவரை கொலை செய்து தூக்​கில் தொங்க விட்​டனரா என்ற கோணத்​தில் போலீ​ஸார் விசா​ரணையை தொடங்​கினர்.

 இதனால், புழல் போலீசார் சந்தேக மரணம் என்றே வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பவ இடம் அருகே உள்ள, ‘சிசிடிவி’ கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். காமிராவில், அங்கு நவீன் பொலினேனி மட்டும், காரில் இருந்து இறங்குவது பதிவாகி உள்ளது. இவர் தற்கொலை தான் செய்து கொண்டுள்ளார் என, போலீசார் முடிவுக்கு வந்து உள்ளனர்.

எனினும், நவீன் பொலினேனியிடம் கையாடல் தொகையில் பங்கு கேட்டு மிரட்டிய, திருமலா பால் நிறுவன அதிகாரிகள் சிலரிடமும் விசாரணை நடக்கிறது. இந் நிலையில், நவீன் பொலினேனி மீது, திருமலா பால் நிறுவனத்தார் அளித்த புகார் மீது, கொளத்துார் துணை கமிஷனர் பாண்டியராஜன், விதிகளை மீறி விசாரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இதற்​கிடை​யில், ‘நவீன் மீது கொளத்​தூர் துணை ஆணை​யர் பாண்​டிய​ராஜனிடம் நிறு​வனம் அளித்த புகா​ரானது விசா​ரணைக்​காக புழல் உதவி ஆணை​யருக்கு அனுப்​பப்​பட்​டு, அவர் மூல​மாக மாதவரம் காவல் நிலைய குற்​றப்​பிரிவு ஆய்​வாளர் விஜய​பாஸ்​கருக்கு அனுப்​பப்​பட்​டிருந்​தது. இதில் விசா​ரணை தொடங்​கப்​பட​வில்​லை. அவரை காவல் நிலை​யம் அழைத்து விசா​ரிக்​க​வும் இல்​லை. மேலும், கடைசி​யாக நவீன் அவரது சகோ​தரி, அவர் பணி செய்த பால் நிறு​வனத்​துக்​கும் மின்​னஞ்​சல் அனுப்பி இருந்​தார். அதில், காவல்​துறையை பற்றி எது​வும் குற்​றம்​சாட்​ட​வில்​லை’ என காவல் ஆணை​யர் தரப்​பில் விளக்​கம் அளிக்​கப்​பட்​டது.

இந்த ​நிலை​யில், நவீன் மரணம் தொடர்​பாக சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணை​யர் திஷா மித்​தல் விசா​ரணையை தொடங்கி உள்​ளார். முதல்​கட்​ட​மாக மாதவரம் குற்​றப்​பிரிவு காவல் ஆய்​வாளர் விஜய​பாஸ்​கர் காத்​திருப்​போர் பட்​டியலுக்கு மாற்​றப்​பட்​டுள்​ளார். அதே​போல் கொளத்​தூர் துணை ஆணை​யர் பாண்​டிய​ராஜனை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​துக்கு வரவழைத்து போலீஸ் அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தினர். மேலும், விசா​ரணை முடி​யும்​வரை அவருக்​கான துணை ஆணை​யர் பணி​கள் எதை​யும் கவனிக்க கூடாது என தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. தின​மும் அவர் காவல் ஆணையர் அலுவலகம் வர வேண்​டும் எனவும் உத்​தரவிடப்​பட்​டுள்​ளது.

இதற்கிடையே, நவீன் பொலினேனி மீது, திருமலா பால் நிறுவனத்தார் அளித்த புகார் மீது முறையாக வழக்குப்பதிந்து விசாரிக்காத, மாதவரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.