சென்னை
இன்று செங்கல்பட்டு மார்க்கத்தில் மின்சார ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது

தெற்கு ரயில்வே,
”சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள சிங்கபெருமாள்கோவில் பணிமனையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையில் (3மணி நேரம் 30 நிமிடம்) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
* செங்கல்பட்டில் இருந்து இன்று காலை 10.40, 11, 11.30, மதியம் 12, 1.10 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை கடற்கரையில் இருந்து இன்று காலை 8.31, 9.02, 9.31, 9.51, 10.56 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் சிங்கபெருமாள்கோவில்-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது.
* காஞ்சீபுரத்தில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் செங்கல்பட்டு-கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது.
இந்த மார்க்கத்தில் இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன் விவரம் வருமாறு:-
* காலை 10.13 மணி: காட்டாங்கொளத்தூர்-கும்மிடிப்பூண்டி.
* காலை 10.46, 11, 11.20, மதியம் 12.20 மணி: காட்டாங்கொளத்தூர்-சென்னை கடற்கரை.
* காலை 11.30, மதியம் 1.10 மணி: செங்கல்பட்டு-சென்னை கடற்கரை.”
என அறிவித்துள்ளது.