சென்னை’
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜெயலலிதாவை சந்தித்தது தாம் செய்த மிகப் பெரிய தவறு எனக் கூறியுள்ளார்

நேற்று சென்னை பூந்தமல்லியில் நடந்த மட்னல மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ,
”என் உயிரைத் தியாகம் செய்கிறேன்.ஆனால், சிலர் மதிமுக இருக்கக்கூடாது என நினைக்கின்றனர். மதிமுகவை அழிக்க முயற்சிக்கிறார்கள்.
எத்தனை நெருக்கடிகள், எத்தனை துரோகங்கள், அத்தனைக்கும் மத்தியில்தான் நான் 31 ஆண்டுகளாக மதிமுகவை கட்டிப் பாதுகாத்து வருகிறேன்
மல்லை சத்யா ஒருமுறை கடலில் விழுந்தபோது காப்பாற்றினார்.மற்ற இரண்டு முறை எப்போது காப்பாற்றினார்?.
, திருச்சி திமுக மாநாட்டிற்கு செல்லாமல் போயஸ்கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்தது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு.
திமுக கூட்டணியில்தான் நாங்கள் எந்த சூழ்நிலையிலும் நீடிப்போம்; திமுக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம்; இது என் கட்டளை”
என உரையாற்றினார்.