ஈரோடு
ஈரோடு பொது நூலகத்தில் ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் தேர்வுகளுக்கு தேவையான குறிப்பேடுகள் இல்லாததால் தேவாளர்கள் அவதியில் ஆழ்ந்துள்ளனர்.

கடந்த 1952 ஆம் ஆண்டு 600 புத்தகங்களுடன் ஈரோடு பேருந்து நிலையம் அருகே வீரபத்திரா வீதியில் துவங்கிய பொது நூலகம் தற்போது ஒரு லட்சத்து 67 ஆயிரம் புத்தகங்களுடன் ஈரோட்டின் மையப் பகுதியில் பொது நூலகமாக விளங்கி வருகிறது. புத்தகங்களை வாங்கி வீட்டிற்கு சென்று படித்து திரும்பி வரும் உறுப்பினர்களாக சுமார் 17,000 பேர் உள்ள இந்த நூலகத்தில் அறிவியல் சட்டம், கதை, இலக்கியம், விளையாட்டு, பொது அறிவு உள்ளிட்ட 42 துறைகளைச் சேர்ந்த புத்தகங்கள் இங்கு உள்ளன.
தற்போது பொது நூலகத்தில் குரூப்-1 குரூப் 2 போன்ற தேர்வு எழுதுபவர்களுக்கு என்று தனியாக கலந்துரையாடல் அறை வேண்டும். தமிழகத்தில் பிரபலமான ஐஏஎஸ் அகாடமிகளான வெற்றி,சங்கர் போன்ற அகாடமியில் உள்ள வெற்றி தொகுப்புகள் இங்கு இடம்பெற வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நூலகத்தில் 1985 ஆண்டு வரையிலான புத்தகம் முதல் 2000 ஆண்டு வரையிலான புத்தகம் வரை மட்டுமே உள்ளது. அதன் பிறகு உள்ள ஆண்டுகளில் வெளிவந்த புத்தகங்களில் ஒரு சில புத்தகங்கள் மட்டுமே உள்ளன மேலும். இணையதள வசதி வேகம் இன்றி குறைந்த வேகத்தில் செயல்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் ஐ பி எஸ், ஐ எஃப் எஸ் உள்ளிட்ட தேர்வுகளுக்கு குறிப்பு எடுக்கும் தேர்வா ளர்கள் கடும் அவதியில் ஆழ்ந்துள்ளார்.
ஈரோடு பேருந்து நிலையத்தை ஒட்டியே இந்த பொது நூலகம் இருப்பதால் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வருகின்ற மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வசதியாக உள்ள நிலையில் இந்த நூலகத்தை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றுவது என மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆகவே இந்த திட்டத்தை கைவிட்டு இதே இடத்தில் நூலகம் செயல்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்