சென்னை: மல்லை சத்யா எனக்கு துரோகம் செய்துவிட்டார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். வைகோவின் இந்த திடீர் மாற்றம் மகனுக்கானது அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். வைகோவில் பிதற்றல் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் துரை வைகோவுக்கும், கட்சியின் நிர்வாகத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த தலைவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். இதையடுத்து போசிய மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா தாம் துரை வைகோவுடன் இணைந்து கட்சிக்கு உறுதுணையாக செயல்பட உள்ளதாக அறிவித்தார். ஆனால், அவர்களுக்கு இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
செயல்வீரர்கள் கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனர்களில் மல்லை சத்யா படம் இடம்பெறாறது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
2021ம் ஆண்டு அக்டோபர் 20ந்தேதி நடைபெற்ற மதிமுகஉயர் நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில், வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு கட்சியில் பதவி கொடுக்கப்பட்டது. கட்சி பணியே செய்யாத ஒருவருக்கு கட்சி பதவி கொடுத்தது மதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதைடத்து, மதிமுக மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன், மதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் பலர் விலகினர். அத்துடன், மதிமுக தொடங்கியது முதல் உடனே இருக்கும் மல்லை சத்யா புறக்கணிக்கப்பட்டு வைகோவின் மகன் என்ற பெயிரல் துரை வையாபுரிக்கு பதவி கொடுத்தது அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதன் தொடர்ச்சி, சமீபத்தில் அம்பலமானது. மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவிற்கு, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் துரைவைகோ பதவி விலகுவதாக கூறிய நிலையில், வைகோ அவரை சமாதானப்படுத்தினார். இதனைத்தொடர்ந்து, வைகோ முன்னிலையில் இருவரும் கை குலுக்கிக் கொண்டு சமாதானம் அடைந்தனர்.
இந்த நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மல்லை சத்யா மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதில், துரைவைகோவுடன் சமாதானம் செய்து வைக்கும்போது, மல்லை சத்யா மட்டும் முகம் வாட்டத்துடன் இறுக்கமாக உட்கார்ந்து இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
வைகோ மற்றும் துரை வைகோ தலைமையில் இன்று ( ஜூலை 10) சென்னையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் மல்லை சத்யாவின் புகைப்படம் இடம்பெறாதது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் மல்லை சத்யா கட்சியில் இருந்து விலக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த வைகோ, ” மல்லை சத்யாவை உடன் பிறவாத தம்பியாகத் தான் நினைத்தேன். என்னைப் பற்றி மிக மோசமாக, பேசக்கூடிய நபர்களுடன் தொடர்பில் இருக்கிறார். பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல எனக்கு மல்லை சத்யா துரோகம் செய்துவிட்டார். கட்சியில் இருந்து யார் வெளியேறினாலும் தாராளமாக வெளியேறி கொள்ளலாம் என்றும், யார் வெளியேறினாலும் கட்சிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. மல்லை சத்யாவின் பின்னணியில் திமுக இருப்பதாக கூறமுடியாது. அது உண்மையும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து வைகோ குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய மல்லை சத்யா, “வைகோ சொன்ன வர்த்தையைத் தாங்கி கொள்ள முடியாத மனவேதனை யில் இருக்கிறேன். குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவுக்கு கட்சித் தலைமையை வழங்குவதற்குத் தயாராகி விட்டார்.
இதுவரை அவரது உயிரை மூன்று முறை காப்பாற்றியிருக்கிறேன். ஆனால், இப்போது வைகோ, தனது மகனுக்காக, எனக்கு துரோகிப் பட்டம் கொடுத்து கட்சியிலிருந்து வெளியேற்றப் பார்க்கிறார்” என்று கூறியிருக்கிறார்.
வைகோவின் இந்த நடவடிக்கையை அரசியல் விமர்சகர்கள் கடுமையாக சாடி உள்ளனர். தனது மகனை கட்சியில் பெரிய ஆளாக மாற்றும் நோக்கமே இந்த பகிரங்க குற்றச்சாட்டு என்று கூறுவதுடன், தனது அரசியல் லாபத்துக்காக, தனது குருவான கலைஞர் கருணாநிதியையே கடுமையாக குற்றம் சாட்டிவிட்டு, திமுகவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கியவர்.
உயிர் உள்ளவரை திமுகவுடன் சேர மாட்டேன், கூட்டணி வைக்க மாட்டேன் என்று கூறியவர், தனது குடும்பத்துக்காக, இன்று எண்சான் கிடையாக திமுக காலடியில் விழுந்து கிடப்பதுடன், மகனுக்கு திமுக ஆதரவுடன் எம்.பி. பதவி பெற்றவர்.
இப்படி இருக்கும்போது, மதிமுக தொடங்கியது முதல் க.ட்சி பணியாக தன்னை அர்ப்பணித்துள்ள மல்லை சத்யாவை, துரோகி என்று வைகோ விமர்சிப்பது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பி உள்ளனார்.
துரை வைகோவுடன் இணைந்து மதிமுக கட்சிக்கு உறுதுணையாக இருப்பேன் : மல்லை சத்யா
மோதல் எதிரொலி: கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவிப்பு