சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் பல வழக்குகளில் அதிகாரிகள் முறையாக பதில் அளிப்பது இல்லை என்றும், நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படுவது இல்லை பலமுறை அதிகாரிகளை எச்சரித்தும் உள்ள நிலையில், அதை மதிக்காமல் அதிகாரிகள் செயல்படும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத சென்னை மாநகராட்சி ஆணையர்மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவருக்கு ரூ.1லட்சம் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலத்தில் உள்ள சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞரும், முன்னாள் கவுன்சிலருமான ருக்மாங்கதன் கடந்த 2021ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஐந்தாவது மண்டலமான ராயபுரத்தில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டது. மேலும், இதுபோலவே சென்னையில் உள்ள போல மற்ற மண்டலங்களில் உள்ள சட்ட விரோத கட்டுமானங்களை கண்டறிந்து விதிமீறல்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கவும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சென்னை மாநகராட்சி காற்றி பறக்கவிட்டது. இதையடுத்து, கடந்த 2021 டிசம்பரில் பிறப்பிக்கப்பட்ட உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக வழக்கறிஞர் ருக்மாங்கதன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர் ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞரை பார்த்து நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது ஏன்? என கேள்வி எழுப்பினர். இதற்கு முறையான பதில் தெரிவிக்காததால் கோபமடைந்த நீதிபதிகள், அதிகாரிகளை கடுமையாக விமர்சித்ததுடன், , நீதிமன்ற உத்தரவை கடந்த 4 ஆண்டுகளாக அமல்படுத்ததாத சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த்து உத்தரவிட்டனர்.
மேலும் இந்த அபராத த தொகையை ஆணையரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து, அதை சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க உத்தரவிட்டனர்.
மேலும், விதிமீறல் கட்டிடங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, ஜூலை 24ம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்தனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.