ரக்கோணம்

ரக்கோணம் அருகே தண்டவாளத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததால்  ஒரு மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

அரக்கோணம் ரயில் நிலையம் அருகே, நேற்று அரக்கோணம் – சென்னை மார்க்கத்தில் செல்லும் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்தது. தகவலறிந்த அரக்கோணம் ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் விரைந்து சென்று மின்கம்பியை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் மின்கம்பி சரி செய்யப்பட்டது.  மின் கம்பி அறுந்து விழுந்ததில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

இதனால் திருப்பதியில் இருந்து சென்னை சென்டிரல் வரும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில், கோவையில் இருந்து சென்னை சென்டிரல் வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்,உள்ளிட்ட 3 ரெயில்கள் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இந்த ரயில்கள் மின்கம்பி சீரமைக்கப்பட்ட பின்னர் சுமார் 1 மணி நேரம் தாமதமாக சென்னை சென்டிரலுக்கு புறப்பட்டு சென்றன. இவ்வாறு ரெயில்களின் ஒரு மணி நேர தாமதத்தால் பயணிகள் மிமவும் அவதி அடைந்தனர்.