சென்னை: பாமகவில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட மோதல் உச்சக்கட்டத்தை தொடங்கி உள்ளது. இதையொட்டி, இன்று இரு தரப்பும் கூட்டங்களை கூட்டி உள்ளன. இதில் கெத்து காட்டப்போவது யார்? என்பது இன்று பிற்பகல் தெரிய வரும்.
பாமகவில் எழுந்துள்ள மோதலைத் தொடர்ந்து, இன்று ராமதாஸ், அன்புமணி தனித்தனிக்கூட்டத்தை அறிவித்து உள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழு கூட்டம் இன்று தைலாபுரத்தில் கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கு போட்டியாக, அன்புமணி ராமதாஸ், சென்னையில் பாமக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி உள்ளார். இதனால் பாமக தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதலால் பாமக பிளவுபட்டு உள்ளது. இரு கோஷ்டிகளாக நிர்வாகிகள் மற்றும் தொண்டனர் பிரிந்து கிடக்கின்றனர். ‘நீயா..?, நானா..?’ என பார்த்து விடுவோம் என்ற முடிவில் இருவரும் உள்ளனர்.
ராமதாஸும், அன்புமணியும் தங்களது எதிர் முகாமில் உள்ளவர்களை பரஸ்பரம் நீக்கியும் சேர்த்து வருகின்றனர். அத உச்சபட்சமாக, பாமக கொறடா பொறுப்பில் இருந்து ராமதாஸ் ஆதரவு பெற்றவரான சேலம் மேற்கு எம்எல்ஏ அருளை நீக்கி அன்புமணி உத்தரவிட்டார். ஆனால், அது செல்லாது என ராமதாஸ் சொல்ல, மொத்தமுள்ள 5 பாமக எம்எல்ஏக்களில் 4 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் சட்டப்பேரவைத் தலைவரிடம் அன்புமணியின் கடிதத்தை அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் வழங்கி உள்ளனர்.
இதற்கு எதிர்வினை ஆற்றிய ராமதாஸ், அடுத்த சில நிமிடங்களில், பாமக கொறடா பொறுப்பில் எம்எல்ஏ அருள் தொடருவதாக சட்டசபை தலைவருக்கு ராமதாஸ் கடிதம் அனுப்பி உள்ளார். இது சட்ட சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பரபரப்புக்கு மத்தியில், இன்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் பாமக செயற்குழு இன்று (ஜூலை 8) கூடுகிறது. இக்கூட்டத்துக்கு நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், பாமக தலைவர் பதவியில் இருந்து அனுப்புமணி நீக்கி உத்தரவிட்டுள்ள ராமதாஸ், சமீபத்தில், நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியில் இருந்தும் அன்புமணி நீக்கப்பட்டுள்ளார். அத்துடன் அன்புமணிக்கு வழங்கப்பட்டுள்ள செயல் தலைவர் பதவியை பறிக்கவும் ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாமக செயற்குழு கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள அன்புமணி, சென்றை சென்னையில் பாமக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி உள்ளார். இதில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இந்த போட்டிக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி, அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கும் என ராமதாஸ் கூறியிருந்த நிலையில், அதன்படி இன்று நிர்வாக குழு கூட்டம் முடிவடைந்த நிலையில், இன்று பாமக செயற்குழுக் கூட்டம் அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கூடுகிறது. இதில், அவரது ஆதரவு மாவட்ட, மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்க அன்புமணிக்கும் அழைப்பு விடுக்கப்படும் என கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்திருந்தார். ஆனால் அழைப்பு விடுக்கப்பட்டதா என்பது குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
இன்று நடெபறும், பாமக செயற்குழுவில், வன்னியர் சங்கம் சார்பில் பூம்புகாரில் ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெறும் மகளிர் மாநாடு தொடர்பாக ஆலோசித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் செயல் தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்குவதற்காக நடைபெறும் ஆயத்த கூட்டம் என்றும் தகவல் பரவி வருகிறது. இதற்காக செயற்குழுக் கூட்டத்தில் அச்சாரம் போட்டு, பொதுக்குழுவில் செயல் வடிவம் கொடுக்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளார் என்றும் தெரிவிக்கின்றனர்.