திருச்செந்தூர்,

ன்று மாலை 4 மணி முதல் திருச்செந்தூர்  கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அன்மதி அளிக்கபட்டுள்ளது.

திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு என்பதால் இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு கடந்த மாதம் 27ம் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கி கடந்த 1ம் தேதி முதல் கோயில் உள்பிரகாரத்தில் மூலவர், பார்வதி அம்பாள், கரிய மாணிக்க விநாயகர், வள்ளி அம்பாள், தெய்வானை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு யாக பூஜைகள் நடைபெற்று வந்தன.

இன்று காலை 6 மணியளவில் ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா குடமுழுக்கு வெகுவிமரிசையாக நடைபெற்றது. 164 அடி உயர ராஜகோபுரத்தில் ஒன்பது கும்ப கலசங்கள், சண்முகர் ராஜகோபுரத்தில் உள்ள ஐந்து கலசங்கள், மூலவர், சண்முகர் மற்றும் வள்ளி தெய்வானை கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கும் குடமுழுக்கு செய்யப்பட்டது. பிறகு பக்தர்கள் மீது டிரோன்கள் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்டபோது பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

இந்த விழவால் திருச்செந்தூர் நகரமே பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இன்றைய குடமுழக்கு விழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் 6000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நேற்று கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலை 4 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.