துரை

ரதட்சனை கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரபல யூ டியூபர் சுதர்சன் தலைமறைவாகி உள்ளார்.

மதுரை ஒத்தக்கடை அருகிலுள்ள வளையாபதி பகுதியைச் சேர்ந்த சுதர்சன் டெக் பாஸ் என்ற சேனல் மூலம் பிரபலமாகி பிறகு டெக் சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் யூடியூப் சேனலை சுதர்சன் ஆரம்பித்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்த, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விமலா தேவி என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டு இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்தாண்டு மார்ச் மாதம் மதுரையில், சுதர்சன் திருமணம் செய்து கொண்டார்.

இந்தத் திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில் 30 சவரன் தங்க நகைகள் மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்கள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆயினும் தன்னிடம் மேலும் 20 சவரன் தங்க நகைகளை வரதட்சணையாக கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக யூடியூபர் சுதர்சன் மற்றும் குடும்பத்தினர் மீது அவரது மனைவி விமலா தேவி கடந்த ஜூன் 27 ஆம் தேதியன்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதன்படி வீடு கட்ட கூடுதல் பணம் வேண்டும் என்று கர்ப்பிணி மனைவியை அடித்து விரட்டியதாக சுதர்சன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது ரூ.5 லட்சம் கொடுக்க மனைவி தயாரான நிலையில், ரூ.10 லட்சம் கேட்டு சுதர்சன் வீட்டார் கொலை மிரட்டல் விடுத்தாக புகாரளிக்கப்பட்டுள்ளது. சுதர்சனின் மனைவி அளித்த புகாரின் பேரில் சுதர்சன் தாய் மாலதி, தந்தை சுந்தர்ராஜன் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து உள்ள்னர். கைதுக்கு பயந்து தற்போது சுதர்சன் தலைமறைவாகியுள்ளார்.