நெல்லை
மேலும் ஒரு மாதத்துக்கு மேட்டுப்பாளையம் – நெல்லை சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம்,
“கோவை மேட்டுப்பாளையம்- நெல்லை இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி நெல்லை-மேட்டுப்பாளையம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்:- 06030) வருகிற 6-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் வந்தடையும்.
இதேபோல மேட்டுப்பாளையம்-நெல்லை இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்:-06029) வருகிற 7-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 1-ந் தேதி வரை திங்கட்கிழமை தோறும், மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லை சென்றடையும்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.”
என அறிவித்துள்ளது.