சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில், படிப்பின் இடைவேளையின்போது, மாணவ மாணவிகள் தண்ணீர் அருந்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட வாட்டர் பெல் திட்டம், இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் இன்றுமுதல் வாட்டர்பெல் திட்டம் அமலுக்கு வரும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்தது. அதன்படி, காலை 11 மணி, மதியம் 1 மணி, மாலை 3 மணிக்கு ‘வாட்டர் பெல்’ அடிக்கப்படும். இதனால், மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கு மாணவர்கள் தண்ணீர் பாட்டிலை கட்டாயம் கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, இன்று காலை 11 மணிக்கு வாட்டர் பெல் திட்டம் அமல்படுத்தப்பட்டது. மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் இடைவெளையின்போது தண்ணீர் அருந்தினர்.
வாட்பெல் திட்டம் ஏன்?
-மாணவ மாணவிகளின் உடல் நீரிழப்பு ஏற்படுவது, மாணவர்களின் அறிவாற்றல், கவனம் மற்றும் கல்வி செயல்திறனை கணிசமாகப் பாதிக்கும். எனவே, பள்ளிகளில் தண்ணீர் நுகர்வுக்கு மாணவர்களை ஊக்குவிப்பது பல்வேறு நன்மைகளைத் தரும். அந்த வகையில், மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக ‘வாட்டர் பெல்’ திட்டம் அறிமுகம் செய்து 5 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் பள்ளியில் ஒருநாளைக்கு 3 முறை தண்ணீர் இடைவேளை மணி அடிக்கப்படும்.
இது வழக்கமான ஒலியில் இருந்து மாறுபட்ட ஒலியில் ஒலிக்கப்பட வேண்டும். காலை 11 மணி, மதியம் 1 மணி, மாலை 3 மணிக்கு ‘வாட்டர் பெல்’ அடிக்கப்படும். பள்ளிகளின் இடைவேளை நேரத்தைப் பொறுத்து நேரத்தை மாற்றி கொள்ளலாம். அதன்படி தண்ணீர் அருந்த 2 முதல் 3 நிமிடங்கள் அளிக்கப்படும். இதற்காக வகுப்புகளுக்கு வெளியே மாணவர்கள் செல்லக்கூடாது. வகுப்புச் சூழல்களுக்கு இடையூறு நேராதவாறு உள்ளேயே தண்ணீரை அருந்த வேண்டும். பள்ளிகளுக்கு மாணவர்கள் தண்ணீர் பாட்டிலை கட்டாயம் கொண்டுவர வேண்டும். இதுகுறித்து மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்ட்டது.
இந்த நிலையில், பள்ளிகளில் மாணவ-மாணவிகள் தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் வாட்டர் பெல் திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டது. அதன்படி, காலை மணிக்கு பெல் அடித்ததும் மாணவர்கள் தண்ணீர் அருந்தினர்.
அரசுப் பள்ளிகளில் “வாட்டர் பெல்” நேரம்! பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் சுற்றறிக்கை