கோவை

ன்று கோவை மற்றும்  வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமறை விடப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில், இன்று (வியாழக்கிழமை) கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புகள் இருப்பதாக எச்சரித்துள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே  கோவையில் கனமழை எச்சரிக்கையை அடுத்து கோவை மற்றும் வால்பாறை பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்படுகிறது என ஆட்சியர் அறிவித்து உள்ளார்.