சென்னை: தொழில் வணிகத்துறையில் 50 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வான 50 பேருக்கு பணி ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், தொழில் வணிகத் துறை சார்பில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்டுள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு நேரடி பணி நியமன ஆணைகளை 50 நபர்களுக்கு இன்று முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
Patrikai.com official YouTube Channel