சென்னை

கீழடியில் அகழாய்வு மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014-2016 வரை நடந்த முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வு மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளராக அமர்நாத் ராமகிருஷ்ணா பணியாற்றியிருந்தார்.இந்த கீழடி அகழாய்வு பணிகள் உலகம் அறிய முக்கிய காரணமாக இருந்தவர் தமிழகத்தைச் சார்ந்த தொல்லியல் அறிஞர் அமர்நாத் அமர்நாத் ராமகிருஷ்ணா ஆவார்.

கீழடியில் அவரது தலைமையிலான குழு ஆய்வு செய்த போது ஆயிரக்கணக்கான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆயினும் ஆய்வு பணிகள் குறித்து இறுதி அறிக்கையை தயாரிக்க அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டு அவர் அசாம் மாநிலத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

மத்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வின் இறுதி அறிக்கை தயாரிக்கும் பணியை பெங்களூரில் உள்ள வேறு தொல்பொருள் அதிகாரிகளிடம் வழங்கியது   பிறகு அசாமில் பணியாற்றி வந்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா சென்னைக்கு மாற்றம் செய்து மத்திய அரசின் தொல்லியல் துறை உத்தரவிட்டது.

தற்போது மீண்டும் கீழடி அகழாய்வு பணியை மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா நொய்டாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதே வேளையில் அமர்நாத் ராமகிருஷ்ணா தாக்கல் செய்த கீழடி அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் கோரியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.