சென்னை: தமிழ்நாடு எங்கே போகிறது?  எனெ முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கேள்வி எழுப்பி உள்ளார்.

காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் பொம்மை முதலமைச்சர்  முதல்வர் ஸ்டாலின்,  இனியும் போதைப்பொருள் ஒழிக்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு துளியும் இல்லை என விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் 5 வாலிபர்கள் கஞ்சா போதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

ஸ்டாலின் ஆட்சியில், தமிழ்நாடு எங்கே போகிறது? என்று தெரியாத நிலையிலேயே உள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றாலும், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின், இனியும் போதைப்பொருள் ஒழிக்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு துளியும் இல்லை.

6 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை, “அவர்களே அவர்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய” அவலச் சூழலை தமிழகத்தில் ஏற்படுத்திய இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.

இதுபோன்ற சம்பவங்களுக்கு அடிப்படை ஆதாரமாக உள்ள போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்காத, காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் பொம்மை முதலமைச்சர் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

இப்படிப்பட்ட கேவலமான ஆட்சியைக் கண்டு கொதிப்படைந்துள்ள மக்கள், இதற்கான தண்டனையை நிச்சயம் 2026-ல் இந்த திமுக அரசுக்கு வழங்கத் தான் போகிறார்கள்.

இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று ( ஜுன் 16ந்தேதி)  தஞ்சையில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,   எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் வகையில் , தமிழக மக்களுக்கு வழங்கும் திட்டங்கள் மற்றும் மக்களுக்கான பிரச்சினையை தொடர்ந்து பேசி வருவதால் எதிர்க்கட்சித் தலைவருக்கு வயிறு எரிவதாக தெரிவித்திருந்தார்.

முதல்வரின் இந்த பேச்சுக்கு பதிலளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டும் தனது அறிக்கைகள் முதல்வர் ஸ்டாலினை மிகவும் உறுத்துவதாக விமர்சித்துள்ளார்.

ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளில், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், வாய்க்கு வந்த ரீல்களை அளந்துவிடுவதுதான் அரைவேக்கா டுத்தனம் எனக் கூறியுள்ளார். மீதேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தந்த முதல்வர், டெல்டாவில் கால் வைக்க கூச்சப்பட்டிருக்க வேண்டுமென தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, உட்கட்சி, கூட்டணிப் பூசல் சத்தமெல்லாம் அறிவாலயத்தில் இருந்து கேட்பதாகத்தானே செய்திகள் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“கட்டப்பஞ்சாயத்து செய்யத்தான் மக்கள் வாக்களித்தார்களா?” – ஜெகன் மூர்த்திக்கு உயர்நீதிமன்றம் கேள்வி இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் துரைமுருகன், எந்த நாடாக இருந்தாலும் வளர்ந்த சமுதாயத்தில் குற்றங்கள் நிகழ்வது அதிகம். ஆனால் குற்றங்களை கண்டுபிடித்து தடுத்தால் தான் அது நல்ல அரசு. அதனைத் தான் தமிழக அரசு செய்து வருவதாக தெரிவித்தார்.