சென்னை: சென்னையில் நடைபெற்ற ‘லோக் அதாலத்’தில் ஒரே நாளில் சென்னையில் நடைபெற்ற ‘லோக் அதாலத்’தில் 1.12 லட்சம் வழக்கு களுக்கு தீர்வு  காணப்பட்டதுடன், அதன்மூலம் ரூ.632 கோடி நிவாரணம் கிடைத்துள்ளது.

சென்னை திருவொற்றியூரில் ஜுன் 14ந்தேதி நடைபெற்ற   ‘லோக் அதாலத், நிகழ்ச்சியல்,  ஒரே நாளில் 667 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்ட துடன்,  வழக்குகள் தொடர்பாக ரூ.1,18,92,316 பணம் வசூலிக்கப்பட்டு மனுதாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜூன் 14 அன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் லோக் அதாலத் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்றத்தில்  ஏறக்குறைய 1.12 லட்சம் வழக்குகளுக்கு ‘லோக் அதாலத்’ எனப்படும் மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்ப ட்டவர்களுக்கு ரூ.632 கோடி நிவாரணம் கிடைத்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் செயல்படும் நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் வழக்குகளில் தீர்ப்பு கிடைக்க ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, மக்கள் நீதிமன்றங்கள் மூலம் விபத்து, நஷ்ட ஈடு தொடர்பான வழக்குகளில் உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

லோக் அதாலத் என்பது மாற்று தகராறு தீர்வு வழிமுறைகளில் ஒன்றாகும், இது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தகராறுகள்/வழக்குகள் அல்லது வழக்குகளுக்கு முந்தைய நிலைகளில் சமரசமாக தீர்வு காணப்படும்/ சமரசம் செய்து கொள்ளும் மன்றமாகும். இதன்மூலம் ஒருசில மணி நேரங்களில் வழக்குகளுக்கு தீர்வு காணப்படுவதுடன், பல வழக்குகள் பைசல் செய்யப்படுகிறது. இதனால் லோக் அதாலத் போன்ற நிகழ்ச்சிகளை அதிக அளவில் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலையில்,  தமிழ்நாட்டில்,  ஆண்டுதோறும் 3 மாதங்களுக்கு ஒரு முறை நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றங்கள்  (லோக் அதாலத்) நடத்தப்பட்டு வருகிறது.   அன்றைய நாளில்,  நீதிபதிகள், வழக்கறிஞர்கள் முன்னிலையில் நடைபெறும் விசாரணையில் மனுதாரர் களும், எதிர்மனுதாரர்களும் விருப்ப அடிப்படையில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு வழக்குகள் தள்ளுபடி மற்றும் பைசல் செய்யப்பட்டும்.

அதன்படி,  தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் (ஜுன் 14) அன்று லோக் அதலாத் நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஜூன் 14 சனிக்கிழமை நடைபெற்ற ‘லோக் அதாலத்’ வாயிலாக, 1.12 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ரூ.631 கோடியே 80 லட்​சத்து 27,703 நிவாரணம் கிடைத்​துள்​ளது.
சென்னை  திருவொற்றியூரில்,   சார்பு நீதிபதி பிரபா தாமஸ் முன்னிலையில் லோக் அதாலத் (மக்கள் மன்றம்)  7 வழக்குகள், குற்றவியல் நடுவர் கார்த்திக் முன்னிலையில் 656 வழக்குகள், மாவட்ட உரிமையியல் நீதிபதி ரேவந்த் முன்னிலையில் 4 வழக்கு என மொத்தம் 667 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. இதுபோன்ற வழக்குகள் காரணமாக,  ரூ.1,18,92,316 பணம் வசூலிக்கப்பட்டு மனுதாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்குகளில்  பெரும்பாலானவை காசோலை மோசடி, கடன் பத்திரங்கள், மண முறிவு, நிலப் பிரச்னை தொடர்பான வழக்குகளாக இருந்தன.

“சென்னையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், மூன்று அமர்வுகள் அமைக்கப்பட்டன. வழக்குகள் தொடர்பாக இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்திய நீதிபதிகள் தங்கள் தீர்ப்புகளையும் உடனுக்குடன் அறிவித்தனர்,” என்று தமிழ்​நாடு மாநில சட்​டப்​பணி​கள் ஆணை​யக்​குழு உறுப்​பினர் செயலர் எஸ்​.​பால​கிருஷ்ணன் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில்​ தெரிவித்துள்ளார்.