சென்னை; ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் ஜேஇஇ தேர்வில் வெற்றிபெற்று மும்பை ஐஐடியில் பொறியியல் படிக்கப்போகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி யோகேஸ்வரி. நான் முதல்வன் திட்டம் மாணவ மாணவிகளுக்கு வரப்பிரசாதம் என்று பாராட்டினார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் தமிழக மாணவர்களுக்கு மத்திய- மாநில அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சென்னை, சேலம், விருதுநகர் ஆகிய நகரங்களில் மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதியுடன் 6 மாத காலம் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பயிற்சி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டு, வெற்றிகரமாக நடைபெற்று மாணவ மாணவிகளுக்கான நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பலஆயிரம் மாணவ மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். சமீபத்தில் தேசிய தேர்வான குடிமைப்பணிக்கான யுபிஎஸ்சி தேர்வில் இதுவரை இல்லாத அளவில் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற 315 தேர்வாகி இருப்பது பெரும் வரவேற்பை பெற்றது. அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதுபோல, பல்வேறு தேசிய தேர்வுகளை எதிர்கொள்ள நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி-களில் படிப்பதற்கான நுழைவு தேர்வான ஜெஇஇ நுழைவுத்தேர்வுக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை நடைபெற்ற மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி), ரயில்வே, வங்கி பணியாளர் தேர்வுவாரியங்கள் நடத்திய தேர்வுகளில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்ற தமிழக மாணவர்கள் 58 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி யோகேஸ்வரி. ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்று, மும்பை ஐஐடியில் ஏரோ ஸ்பேஸ் பொறியியல் படிப்பு படிக்க தேர்வாகியுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
அவரது வெற்றியை பாராட்டி விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன், விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.500 வழங்கி பாராட்டினார்.
மாற்றுத்திறனாளி மாணவியான யோகேஸ்வரி ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். கல்வியில் சாதிக்க வேண்டும் என வெறியுடன் படித்து வரும் நிலையில், நாட்டின் உயர்ந்த பொறியியல் படிப்புகளை வழங்கும் ஐஐடியில் சேர்ந்து படிக்க வேண்டும் என ஆசை கொண்டார். அவரது ஆசையை நிறைவேற்றும் வருகையில், அதற்கான ஜெஇஇ நுழைவு தேர்வுக்கான பயிற்சியை நான் முதல்வன் திட்டத்தின்கீழ் இலவசமாக அளிக்கப்பட்ட நிலையில், அதில் இணைந்து பயிற்சி பெற்று, தேர்வை எதிர்கொண்டார்.
இந்த தேர்வில் யோகேஸ்வரி வெற்றி பெற்று, அவரது கனவான மும்பை ஐஐடிடியில் ஏரோ ஸ்பெஸ் கோர்சில் சேர இடம் பெற்றுள்ளார்.
இதையடுத்து மாணவி யோகேஸ்வரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த மாற்றுதிறனாளி மாணவிய்ன தந்தை அந்த பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் கூலி வேலை செய்து வருகிறது. அவரது அம்மா அந்த பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் பணியாற்றி வருகிறார்.
தனது வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய யோகேஸ்வரி, தனது வெற்றிக்கு துணைபுரிந்த நான் முதல்வன் திட்டம், அதை கொடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். இந்த திட்டம் ஏழைகளின் வரப்பிரசாதம் என்று கூறியவர், அனைவரும் நான் முதல்வன் திட்டத்தில் சேர்ந்து, அனைத்து மாநில மற்றும் தேசிய தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார்.