அகதாபாத்: அகமதாபாத் விமான விபத்து நடப்பதற்கு சற்று முன்பாக,  விமானி அவசரகால அழைப்பான ‘MAYDAY‘ அழைப்பு  விடுக்கப்பட்ட நிலையில்,  அது புறக்கணிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் விமானம் மேலே எழும்பும்போது,  வீடுகளின்மீது மோதி விபத்துக்குள்ளாகும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

242 பயணிகளுடன சென்ற ஏர் இந்தியா விமானம் குஜராத் மாநிலத்தில் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. , இன்று பிற்பகல் 1.17 மணியளவில், 230 பயணிகள் மற்றும் 12 ஊழியர்கள் என, 242 பேருடன் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 ரக விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, கட்டுப்பாட்டை இழந்து, மேகனி நகரில் உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கிய விபத்துக்கு உள்ளானது.

விமானம் விழுந்ததும் பெரும் நெருப்புடன் வெடித்து, வானுயர கரும்புகை எழுந்தது. இந்த விபத்தில் காயடைந்த பலரை மீட்ட மீட்புப் படையினர், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்தில் உயிரிழந்த  பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. மேலும் விமானம் மோதிய  மருத்துவமனையிலும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனுள் இருந்த மிருத்துவர்கள் உள்பட சிலர் பலத்த காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.  ப அதில் பயணம் செய்த முன்னாள் முதல்வர் ரூபானியின் நிலை என்ன? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இதற்கிடையில்,  அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், விழுவதற்கு சற்று முன்னர் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு ‘மேடே‘ அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின் என்ன நடந்தது.?  என்று சுதாரிப்பதற்குள் விமானம் விபத்துக்குள்ளானது.

அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு மேடே அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், அதன் பிறகு, ஏடிசி செய்த அழைப்புகளுக்கு விமானத்தால் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்று டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

இந்த பயங்கர விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை தொடங்கியுள்ள நிலையில், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு (ATC) ‘மேடே‘(MAYDAY) அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து ஏடிசி உடனடியாக விமானத்தை தொடர்புகொள்ள முயன்றுள்ளது. ஆனால், அதன் பிறகு ஏடிசி விடுத்த அழைப்புகளுக்கு விமானத்தால் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்று டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

‘மேடே‘ என்றால் என்ன.?

பொதுவாக, விமான பயணத்தில், ‘மேடே‘ அதாவது ‘Mayday’ என்பது, விமானத்திற்கோ அல்லது பயணிகளுக்கோ ஆபத்தை ஏற்படுத்தும் அவசரகால சூழ்நிலையை அறிவிக்க, விமானிகள் பயன்படுத்தும் சர்வதேச அளவிலான அங்கீகரிக்கப்பட்ட துயர சமிக்ஞை ஆகும்.

வாய்மோழியாக விடுக்கப்படும் இந்த துயர அழைப்பின் போது, பெரும்பாலும் 3 முறை, அதாவது “மேடே, மேடே, மேடே“ என்று மீண்டும் மீண்டும் சொல்லப்படு கிறது. இது, வானொலியில் கேட்கப்படுவதையும், புரிந்துகொள்வதையும் உறுதி செய்யும்.

உயிருக்கு ஆபத்தான அவசரநிலை குறித்து, விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை மற்றும் பிற விமானங்களுக்கும் இந்த ‘மேடே‘ அழைப்பு எச்சரிக்கிறது. மேலும், இந்த ‘மேடே‘ அழைப்பு என்பது உலகளாவிய துயர சமிக்ஞையாக, விமான போக்குவரத்து மற்றும் கடல்சார் சூழல்களில் பயன்படுத்தப்படுகிறது.

விமானம் தீப்பிடிக்கும்போதோ, மூழ்கும்போதோ அல்லது பிற கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் சூழ்நிலைகள் ஏற்படும் போது, விமானிகள் ‘மேடே‘ என்ற சொல்லை பயன்படுத்துகின்றனர். விபத்துக்குள்ளான விமானத்தின் ஆரம்ப தகவல் தொடர்பு மற்றும் அடுத்தடுத்த தகவல் பரிமாற்றங்கள் ‘மேடே‘ என்ற சின்கலுடன் தொடங்கப்பட வேண்டும்.

‘மேடே‘ என்ற ஒலி பயன்பாட்டில் உள்ள அதிர்வெண்ணில், ரேடியோ அமைதி நிலவுகிறது. ஏனென்றால், இது விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பிற விமானங்களின் உடனடி கவனம் தேவைப்படும் ஒரு முக்கியமான அவசர நிலையை குறிக்கிறது.

பல நாடுகளில், ‘மேடே‘ சமிக்ஞையை தவறாக அனுப்புவது குடுமையான குற்றமாக கருதப்படுகிறது.