சென்னை
சென்னை உயர்நீதிமன்றம் திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் திரையரங்குகளில் புதிதாக வெளியாகும் திரைப்படங்களுக்கு முதல் நான்கு நாட்கள் அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தெரிந்ததே.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கூறி தேவராஜன் என்பவர் ய்=உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
மேலும், இன்றைய காலத்தில் தியேட்டர்களில் படம் பார்க்கும்போது வாங்கி சாப்பிடும் பாப்கார்ன் கூட வீட்டிற்கே டெலிவிரி செய்யும் நிலை உள்ளது என்றும், ஓ.டி.டி.யால் தியேட்டர்கள் நீண்ட காலம் நீடிக்காது என்பதை தியேட்டர்கள் உரிமையாளர்கள் சிந்திக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.