தூத்​துக்​குடி: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் திருச்சீரலைவாய் என்ற திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஜூலை 7ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அறு​படை வீடு​களில் 2-ம் படை வீடான திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் ஜூலை 7-ம் தேதி  காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்​குள் மகா கும்​பாபிஷேகம் நடத்​தப்​படும் என்று கோயில் நிர்​வாகம் அறி​வித்​துள்​ளது

திருச்செந்தூர் கோவில் விரிவாக்கம்  மற்றும் கும்பாபிஷேகம் என்ற பெயரில், பெரும்பாலான கட்டிடங்கள், கடற்கரை யோரம் போன்றை இடித்து நொறுக்கப்பட்டு, பணிகள் முடிவடையாதவாறு உள்ளது. இதனால், பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லவே தயங்கும் நிலை உருவாகி உள்ளது. ஏற்கனவே கோவில் தரப்பில் கட்டப்பட்ட பல பக்தர்கள்  குடியிருப்பு கட்டிடங்கள் முறையாக கட்டப்படவில்லை என்று புகார்கள் எழுந்தன. அதுபோல தற்போதும், கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் முறையாக பராமரிக்கப்பட்டு, மக்கள் நடமாடுவதற்கே முடியாத நிலை உள்ளது.

இதனால், கோவில்,  கும்​பாபிஷேகம் நடத்​து​வதற்​கான நேரத்தை முடிவு செய்​வ​தில் கோயில் நிர்​வாகம், அறநிலையத்து மற்​றும் கோயில் விதாயகர்த்தா இடையே கருத்து வேறு​பாடு நிலவி வந்​தது. இது தொடர்​பாக நீதி​மன்​றத்​தில் வழக்​கும் தொடரப்​பட்​டு, உச்ச நீதி​மன்​றம் அந்த வழக்கை கடந்த இரு தினங்​களுக்கு முன்பு தள்​ளு​படி செய்​தது.

இந்​த நிலை​யில், திருச்​செந்​தூர் கோயி​லில் ஜூலை 7-ம் தேதி கும்​பாபிஷேகம் நடக்​கும் நேரத்தை கோயில் நிர்​வாகம் அதிகாரப்பூர்வமலாக அறிவித்து உள்ளது.

இதுகுறித்து அறநிலை​யத் துறை இணை ஆணை​யர் சு.​ஞான​சேகரன் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில், “திருச்​செந்​தூர் கோயி​லில் 12 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை நடக்​கும் குட​முழுக்கு விழா இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை சிறப்​பாக நடை​பெற உள்​ளது. அதில் முக்​கிய நிகழ்ச்​சி​யான திருக்​குட நன்​னீ​ராட்டு விழா ஜூலை 7-ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்​குள் நடத்​தப்​படும்” என்று தெரி​விக்கப்பட்டு உள்ளது.

மகா கும்​பாபிஷேகம் நடத்​தப்​படும் முகூர்த்த நேரத்தை கோயில் நிர்​வாகம் அறி​வித்​து, இது தொடர்​பான சர்ச்​சைகளுக்கு முற்​றுப்​புள்​ளி வைத்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது