சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், தற்காலிகமாக ரயில் நிலையத்தின்  1, 2-வது நடைமேடைகள் மூடப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இதன் காரணமாக பல ரயில்கள் புறப்படும் மற்றும் வந்தடையும் நடைமேடை மாற்றம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிழகத்​தில் முக்​கிய ரயில் நிலை​யங்​களில் ஒன்​றாக எழும்​பூர் ரயில் நிலை​யம்  உலக தரத்துக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக ரயில்நிலைய  மறுசீரமைப்பு பணி ரூ.734.91 கோடி​யில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள்  கடந்த 2023-ம் ஆண்டு பிப்​ர​வரி​யில் தொடங்​கி நடைபெற்று வருகிறது. அத்துடன்,  காந்தி இர்​வின் சாலை பக்​கத்​தில் எழும்​பூர் ரயில் நிலை​யத்தை ஒட்டி பன்​னடுக்கு வாகன நிறுத்​து​மிடம், வணிக வளாகம் அமைக்​கும் பணி​ முழு​வீச்​சில் நடை​பெறுகிறது.

இதற்​கிடை​யில் மறுசீரமைப்பு பணிகளுக்காக , ரயில் நிலை​யத்​தில் 1-வது நடைமேடை முதல் 11-வது நடைமேடை வரை அனைத்​தை​யும் இணைக்​கும் வித​மாக, நடைமேம்​பாலம் அமைப்​ப​தற்​கான ஆரம்​ப பணி​ தொடங்​கி​யுள்​ளது. இதற்​காக, ரயில் நிலையத்​தின் முதல், 2-வது நடைமேடைகள் நேற்று முதல் மூடப்​பட்​டுள்​ளன. அடுத்த 15 நாட்​களுக்கு பிறகு 3, 4 வது நடைமேடைகளை மூட திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்​து, செய்தியாளர்களிடம் கூறிய  சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் , ரயில் நிலை​யத்​தின் நடைமேடைகளை இணைக்​கும் வகை​யில், ஒரு பிரம்​மாண்ட நடைமேம்​பாலம் அமைக்​கப்பட உள்​ளது. தற்​போது, அடித்​தளம் அமைக்​கும் பணி தொடங்​கி​யுள்​ளது. 1,2 ஆகிய நடைமேடைகள் மூடப்​பட்​டுள்​ளன.

இதன் காரண​மாக, புதுச்​சேரி மெமு பாசஞ்​சர் ரயில் கடற்​கரை ரயில் நிலை​யத்​திலிருந்து புறப்​பட்​டு, வந்​தடை​யும் வகை​யில் அட்​ட​வணை மாற்றி அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இதுத​விர படிப்​படி​யாக ரயில் நடைமேடைகள் மூடப்பட உள்​ளன. நடைமேடைகள் மூடப்​பட​வுள்​ள​தால், சுமார் 10 விரைவு ரயில்​களின் சேவை​யில் மாற்​றம் இருக்க வாய்ப்பு உள்​ளது.

இது தொடர்​பான அறி​விப்பு விரை​வில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.