சென்னை

ன்று நடந்த மருத்துவர் ராமதாஸ் உடனான சந்திப்பு குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

ஏற்கனவே பாமகவில் உள்கட்சி மோதல் நடைபெற்று வருவது தெரிந்ததே,  இந்நிலையில், இன்று ராமதாசை அன்புமணி சந்தித்தார். அவர் சென்ற சிறிது நேரத்திலேயே ஆடிட்டர் குருமூர்த்தி தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை தந்து ஆடிட்டர் குருமூர்த்தியும் பாமக நிறுவனர் ராமதாசும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அரசியல் நிபுணர்கள் இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க பாஜகவின் ஆதிக்கம் இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.  சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்கள் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே சமாதானம் பேச வந்தீர்களா என்று கேள்விக்எழுப்பினர்.

.ஆடிட்டர் குருமூர்த்தி.,

“பாஜகவுக்காக நான் தைலப்புரம் வரவில்லை. எனது நீண்ட கால நண்பர் ராமதாஸ். நண்பர் ராமதாசை சந்தித்து பேசினேன்.வேறு ஏதும் இல்லை. நட்பு ரீதியாக சந்தித்து நீண்ட நேரமாக பேசினேன். நண்பர் என்ற முறையில் சந்திக்க வந்தேன். அன்புமணி வந்ததே எனக்கு தெரியாது.”

என்று பதில் அளித்துள்ளார்