சென்னை
இதுவரை பொறியியல் கல்லுரிகளில் சேர 2.76 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

தற்போது தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.
இ;கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்படும். தமிழக அர்சு சாப்ரில் இந்தக் கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
வரும் கல்வி ஆண்டு (2025-2026) பி.இ., பி.டெக் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த மே 7ம் தேதி தொடங்கியதையடுத்து பொறியியல் படிப்புகளில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் https://www.tneaonline.org. என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து வருகின்றனர்.
நேற்று மாலை நிலவரப்படி கடந்த 26 நாட்களில் பொறியியல் கலந்தாய்வுக்கு 2,76,724 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு விண்ணப்பிக்க ஜூன் 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் உள்ளது.
சென்ற ஆண்டு 2.53 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், நடப்பாண்டில் கடந்த ஆண்டைவிட அதிகமாக அதாவது தற்போதே 2.76 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்,