சென்னை

டைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் அதிமுக 2 இடங்களுக்கும் தனது வேட்பாளரகளை அறிவித்துள்ளது.

வரும் 16 ஆம் தேதி தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு எம்.பி. வெற்றி பெற வேண்டுமென்றால் 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்னும் அடிப்படையில் 6 எம்.பி. பதவிகளில் சட்டசபை பலத்திற்கு ஏற்ப தி.மு.க.விற்கு 4-ம், அ.தி.மு.க.விற்கு பா.ஜனதா ஆதரவுடன் 2 எம்.பி.க்களும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இதில் தி.மு.க. சார்பில் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகிய 3 பேர் போட்டியிடுவார்கள் என்றும், மீதமுள்ள ஒரு இடம் மக்கள் நீதி மய்யத்திற்கும் ஒதுக்கப்பட்டு அதில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்றும் அந்த கட்சி அறிவித்துள்ளது. அதிமுக சார்பாக. தேமுதிக தங்களுக்கு ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என்றும், அதிமுக இது தொடர்பாக வாக்குறுதி அளித்ததாகவும் கூறி வந்தது.

இன்று அ.தி.மு.க. சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அதன்படி, முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட அவை தலைவர் தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேமுதிகவிற்கு வரும் 2026-ஆம் ஆண்டு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்றும் அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும் என்றும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது.