திருநெல்வேலி

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாள் கசிவால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் நெல்லை, தென்காசி, குமரி, தூத்துகுடி உள்பட பல மாவட்டங்களில் உள்ள 106 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரியில் 200-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றி வரும் நிலையில்107-க்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளன.

தற்போது இந்த கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. இன்று “இன்டஸ்ட்ரியல் லா” என்ற பாடத்திற்கான தேர்வு நடைபெற இருந்தது. தேர்வெழுத மாணவ, மாணவிகள் தயாராகி வந்த நிலையில் இன்று திடீரென “இன்டஸ்ட்ரியல் லா” பாடத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

எனவே மனோன்மணியம் பல்கலைக்கழகம் கீழ் இயங்கும் 106 கல்லூரிகளிலும் இண்டஸ்ட்ரியல் லா பாடத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு வினாத்தாள் கசிவால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இன்டஸ்ட்ரியல் லா பாடத் தேர்வுக்காக கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்ட வினாத்தாள்களை திரும்ப பெறும் பணி நடந்து வருகிறது.