திருநெல்வேலி

டும் வெள்ளம் காரணமாக மணிமுத்தாறு அருவியி குளீக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவட்ஜால் இங்கு குளித்து மகிழ்வதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

வழக்கமாக மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்யும்போது மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் அந்த காலகட்டங்களில் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடைவிதிப்பது வழக்கம்.

தற்போது அருவிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்து மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை தொடரும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.