கோவை

ற்போது கோவையில் பெய்து வரும் கனமழையால் 5 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

 

வழக்கமாக தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் நிலையில் இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்கூட்டிய தொடங்கிவிட்டது., தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கி நீலகிரி, கன்னியாகுமரி, கோவை, தேனி போன்ற பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

தமிழக அமைச்சர் முத்துசாமி  இது தொடர்பாக,

“கோவையில் பெய்துவரும் கனமழையால் இதுவரை 5 வீடுகள் சேதமடைந்துள்ளன. 2 பேருக்கு சிறு காயம் ஏற்பட்டுளது. மழை தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். மழையால் ஏற்பட்ட சேதங்களை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். இழப்பீடு வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர் முடிவெடிப்பார்’

என்று தெரிவித்துள்ளார்ர்.,