சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் கற்கள் சரிந்து தொழிலாளிகள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் தனியாருக்கு சொந்தமான மேகா புளூ மெட்டல் என்ற தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரி உள்ளேயும், பெரிய பள்ளம் தோண்டப்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. பல பகுதிகளில் இருந்து கொண்டு வரும் கற்களை கொண்டு எம்.சாண்ட் மணல் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று காலை வழக்கம்போல குவாரி செயல்படத் தொடங்கியது. தொழிலாளர்களும் தங்களது பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அப்போது, அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த கற்கள் திடீரென சரிந்து, அருகே வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள்மீது விழுந்து நசுக்கியது.
அவர்கள் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது இடிபாடுகளுக்குள் சிக்கி 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இரண்டு பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். . மைக்கேல் என்பவர் படுகாயம் அடைந்து சிகிச்சையில் உள்ளார்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர். இது தொழிலாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.