சம்பா
இன்று காலை 10.44 மணியளவில் இமாசலப்பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது,

இன்று காலை இமாச்சல் பிரதேசத்தில் சம்பா பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இன்று காலை 10.44 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 5 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு 32.71 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.37 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
Patrikai.com official YouTube Channel