சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் இதுவரை 1.8 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.  அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை   3 லட்சம் இலக்கை நோக்கி  மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.


தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மாணவர்கள் நலனுக்காக கற்பித்தல், கற்றல் சார்ந்து எண்ணும்-எழுத்தும், காலை உணவு, ஸ்மார்ட் வகுப்பறைகள் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.  அதன்படி,  நடப்பு கல்வியாண்டில்,  அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகளை கூறி ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று மாணவர்கள் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம், நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, உயர்வுக்குப்படி என தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரும் பல்வேறு மாணவர் நலன் சார்ந்த திட்டங்களை பெற்றோருக்கு எடுத்துரைத்து தொடர்ந்து விடுமுறை நாட்களிலும் மாணவர் சேர்க்கை ஆசிரியர்கள் துரிதப்படுத்தி வருகின்றனர் இதன் காரணமாக, ஏராளமான பெற்றோர்கள் பலர் ஆர்வமுடன் தங்கள் பிள்ளைகளை சேர்த்து வருகின்றனர்.

அந்தவகையில் இதுவரை 1.8 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் 3 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்தபின், 3 லட்சம் மாணவர்கள் என்ற இலக்கை கடந்து மாணவர் சேர்க்கை இருக்குமென அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்

சென்னை மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை இரு மடங்காக உயர்வு! மாநகராட்சி தகவல்