மாமல்லபுரம்

;மாமல்லபுரத்தில் இன்று மாலை பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெற உள்ளது/

கடந்த 2013 ஆம் ஆண்டு பாமகவின் முதல் சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெற்றது. மாமல்லபுரத்தில் இன்று மாலை 4 மணியளவில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ‘சித்திரை முழுநிலவு மாநாடு’ நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வந்தன. மாநாட்டிற்கான சிறப்பு பாடல்கள், லட்சினை ஆகியவை சமீபத்தில் வெளியானது.

சித்திரை முழுநிலவு மாநாட்டிற்கு வருகை தருபவர்களுக்கான அறிவுறுத்தல்களை காவல்துறை அண்மையில் வெளியிட்டிருந்தது. இந்த மாநாட்டிற்கு வருபவர்கள் பாதுகாப்பாகவும், அமைதியான முறையிலும் வருகை தருமாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று முன்தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

சித்திரை முழுநிலவு மாநாட்டை ஒட்டி விழுப்புரம், செங்கல்பட்டு, புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாட்டை ஒட்டி விழாக்கோலம் பூண்டுள்ளது. சித்திரை முழுநிலவு மாநாட்டுக்கான ஏற்பாடுகள் அதாவது மாநாட்டு திடலின் ட்ரோன் காட்சிகளை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்ஃபுள்ளார். , அவர் அந்த வீடியோவுடன் ‘இனமே எழு உரிமை பெறு’ என குறிப்பிட்டு:ள்ளார்.