சென்னை

டிகர்கள் ரஜினிகாந்த் விஜய் ஆகியோர் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பாராட்டி உள்ளனர்,

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ‘தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்’ பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவானது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட இந்த தாக்குதலுக்குயின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை  நடிகர் ரஜினி, எல்ஸ் தளத்தில்

போராளியின் சண்டை தொடங்கியது. இலக்கை அடையும் வரை நிறுத்தப்போவதில்லை. முழு தேசமும் உங்களுடம் நிற்கிறது ‘

என்று பதிவிட்டுள்ளர்

இதை போல் நடிகர் விஜய் எக்ஸ் தளத்தில்,

”இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட் !

என்று பதிவிட்டுள்ளார்.