பட்டுக்கோட்டை: பாஜக பெண் நிர்வாகி நடுரோட்டில் ஓட ஓட விரட்டி தலை துடித்து வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பாஜக பெண் நிர்வாகி சரண்யா என்பவர், பட்டுக்கோட்டையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சமீபத்தில்தான் அவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. , கணவருடன் பட்டுக்கோட்டையில் வசித்து வந்தார். அங்கு ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு அவர் தனது ஜெராக்ஸ் கடையை பூட்டிவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது சரண்யாவை மர்மக்கும்பல் சாலையில் ஓட ஓட விரட்டி, அவரது தலையைதுண்டித்து கொலை செய்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து சரண்யாவின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடைபெற்ற வருகிறது. முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையைச் சேர்ந்தவர் சரண்யா, குடும்பத்துடன் மதுரையில் வசித்து வந்துள்ளனர். இவருக்கு முதல் திருமணம் கடந்த 2021-ல் நடைபெற்றது. அவரது கணவர் சண்முகசுந்தரம் உயிரிழந்த நிலையில் சரண்யா பட்டுக்கோட்டை தாலுகா, கழுகபுலி காடு கிராமத்தைச் சேர்ந்த பாலன்(வயது45) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் உதயசூரியத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். சரண்யா என்பவர் மதுரை மாநகர பாஜக மகளிர் அணி நிர்வாகியாக உள்ளார். திருமணம் முடிந்த நிலையில், சரண்யா தந்து கணவருடன் பட்டுக்கோட்டையில் வசித்து வந்தார். பாலனும், சரண்யாவும் உதயசூரியபுரம் கடைத்தெருவில் அய்யனார் டிராவல்ஸ் மற்றும் சரண்யா ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில், பட்டுக்கோட்டையில் பாஜக பெண் நிர்வாகி தலையை துண்டித்து கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.