சென்னை: சென்னையில் வைரம் உரிமையாளரை ஏமாற்றி ஓட்டலுக்கு வரவழைத்து அங்கு கட்டிப்போட்டுவிட்டு, அவரிடம் இருந்த சமார்  ரூ.20 கோடி மதிப்பிலான வைரம் கொள்ளை அடிக்கப்பட்டத. இதுதொடர்பாக  4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தமிழ்நாடு முழுவதும் உஷார்படுத்தினர். மேலும் சுங்கச்சாவடிகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இநத் நிலையில்,  தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே சுங்கச்சாவடியை கடக்க முயன்றபோது வாகனத்தில் சென்ற 4 பேரை தூத்துக்குடி போலீஸார் கைது செய்தனர்.  அவர்கள்  விசாரணைக்ககாக சென்னை அழைத்து வரப்பட்டுள்ளனர்.

முன்னதாக,  சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் (வயது 70) என்பவர்,  விலையுயா்ந்த பழைய பொருள்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறாா்.  இவர், தனக்கு தெரிந்த   மதுரையைச் சோ்ந்த தொழிலதிபருக்குச் சொந்தமான 17 கேரட் வைர நகை விற்பனைக்கு உள்ளதாகவும், அதனை விற்பனை செய்து தரும்படியும் வலியுறுத்தி  சில புரோக்கர்கள் அணுகி உள்ளார்.

இதையடுத்து வைரத்தை வாங்குவதற்காக, இடைத்தரகா்களான சென்னை வில்லிவாக்கத்தைச் சோ்ந்த ராகுல் (30), மணலி சேக்காடு பகுதியைச் சோ்ந்த ஆரோக்கியராஜ் (45) மற்றும் சைதாப்பேட்டையைச் சோ்ந்த சுப்பன் (45) ஆகியோர்,  தங்களுடன் ராஜன் மற்றும் அவரின் நண்பா் விஜய் மற்றும் உதவியாளா் அருணாச்சலம் ஆகியோரை அழைத்துக்கொண்டு சந்திரசேகா் வீட்டுக்குச சென்றுள்ளனா். அங்கு அவா் வைத்திருந்த 17 கேரட் வைர நகையை பரிசோதித்ததுடன், அதற்கு ரூ. 23 கோடி விலை பேசி உறுதியளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனா்.

இதையடுத்து நேற்று ( ஞாயிற்றுக்கிழமை)  சந்திரசேகரை தொடா்புகொண்ட இடைத்தரகா்கள், நகை வாங்கும் நபா்கள் அதற்கான பணத்தை கொண்டு வந்திருப்பதாகவும், அதை சென்னை வடபழனியிலுள்ள தனியாா் ஹோட்டலில் வைத்து தருவதாகவும் கூறி, அங்குள்ள ஒரு அறைக்கு சந்திரசேகரை வரவைத்துள்ளனா்.

இந்த ஓட்டலுக்கு தனது வளா்ப்பு மகளான ஜானகி (27) என்பவருடன் வந்திருந்த சந்திரசேகா், குறிப்பிட்ட அறைக்கு தனியாக வைர நகையுடன் சென்றுள்ளாா். ஆனால் நீண்ட நேரமாகியும் சந்திரசேகா் வெளியே வராததால் சந்தேகமடைந்த ஜானகி, அறைக்குச் சென்று பாா்த்தபோது, அங்கு சந்திரசேகரின் கை, கால்களை கட்டி போட்டுவிட்டு, வைர நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து  ஜானகி உடனடியாக, ஹோட்டல் நிா்வாகத்துக்கு தகவல் கொடுக்க, அவர்கள் கொடுத்த தகவலின்படி, ஜானகி, அவரது நண்பா் சுப்பிரமணி, ஓட்டுநா் ஆகாஷ், இடைத்தரகா்களான ராகுல், ஆரோக்கியராஜ், சுப்பன் ஆகியோரிடம் தியாகராய நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.