சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த போதை பொருள் கடத்தல் ‘கேங்’  தலைவர்களான முன்னாள் திமுக பிரமுகர் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீமுக்கு சென்னை உயர்நீதி மன்றம் ஜாமின் வழங்கியது.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஜாபர் சாதிக். இவர் திமுகவின் முன்னாள் அயலக அணி செயலாளராக இருந்தவர். இவர்   சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக ஜாபர் சாதிக் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளார்.  இவர் போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக கடந்த 2024ம் அண்டு ஜுன் மாதம் கைது செய்யப்பட்டார். முன்னதாக டெல்லியில் கைது செய்யப்பட்ட போதை பொருள்  கடத்தல் கும்பல் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில்,  போதைப்பொருள் கடத்தியதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜாபக் சாதிக் கைது செய்யப்பட்டார். இவர் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இதனை தொடர்ந்து சட்டவிரோத பரிமாற்ற வழக்கு தொடர்பாக ஜாபக் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலிக் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள்.

இவர்கள்மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இதனிடையே, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமின் வழங்கக்கோரி ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுமீதான விசாரணை நடத்தியது. கடந்த விசாரணைகளின்போது, அமலாக்கத்துறை வழக்கறிஞர் வாதாடும்போது,  ஜாபர் சாதிக்,  “போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த பணத்தை இயக்குனர் அமீர் உள்ளிட்டோரின் வங்கிக் கணக்குகளில்  செலுத்தி யுள்ளார். மேலும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக ஜாபர் சாதிக் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளார். ஜாபர் சாதிக் திமுகவின் நிர்வாகியாக இருந்ததால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் ஜாமின் வழங்கக்கூடாது” என்று அமலாக்கத்துறை தெரிவித்தது.

இதனை தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இந்த நிலையில், இன்று ஜாமின் மனு மீது நீதிபதி சுந்தரமோகன் தீர்ப்பளித்துள்ளார்.  தீர்ப்பின் போது, டெல்லியின் முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியாவின் தீர்ப்பை முன் உதாரணமாக வைத்து ஜாபர் சாதிக் மற்றும் முகமது சலீமுக்கு முன் ஜாமின் வழங்குவதாக நீதிபதி தெரிவித்தார்.

போதைபொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தில் பயன்படுத்தி உள்ளார் ஜாபர் சாதிக்! அண்ணாலை குற்றச்சாட்டு…

போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கின் நட்சத்திர ஓட்டல் உள்பட ரூ.55 கோடி சொத்துக்கள் பறிமுதல்!

போதை பொருள் கடத்தலில் கிடைத்த ரூ.21 கோடியில் முக்கிய புள்ளிகளுக்கு பங்கு! ஜாபர் சாதிக்கிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்…

ஜாபர் சாதிக் மீதான போதைபொருள் கடத்தல் வழக்கு: இயக்குனர் அமீர் உள்பட12 பேர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் ஜாமின் கோரி மனு! அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!