குமரி: குமரி கடலில், விவேகானந்தர் மண்டம், வள்ளுவர் சிலை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சுற்றுலாப் பயணிகளுக்கு 5 நாட்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

முக்கடல் சங்கமிக்கும் குமரி கடலில், திருவள்ளுவர் சிலைக்கு கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. ரூ. 37 கோடியில் 77 மீட்டா் நீளம் 10 மீட்டா் அகலத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கண்ணாடி கூண்டுப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் திற்ககப்பட்ட சில நாட்களிலேயே பராமரிப்பு பணி என கூறி சில நாட்கள் மூடப்பட்டது. இது விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அடுத்த 4 மாதங்களுக்குள் மீண்டும் பராமரிப்பு பணிகள் என்று கூறி பாலத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
குமரி கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம்- திருவள்ளுவர் சிலை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டு பாலம் கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. அதாவது 2024ம் ஆண்டு டிசம்பர் 30ந்தேதி அன்று முதலமைச்சர் ஸ்டாலின் இந்த கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார். அன்றைய தினம் முதல் கண்ணாடி பாலத்தில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள அந்த பாலத்தை சுற்றுலாப் பயணிகள் மிகவும் ஆர்வமாக பார்வையிட்டு வந்தனர்.
இந்த நிலையில் கண்ணாடி பாலத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 19-ந்தேதி வரை 5 நாட்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி கண்ணாடி பாலத்தில் பராமரிப்பு பணிகள் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் முன்னிலையில் இன்று தொடங்கியது. இந்த பராமரிப்பு பணிகள் வருகிற 19-ந்தேதி வரை நடக்கிறது. இதனால் இன்று கண்ணாடி பாலத்தில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பராமரிப்பு பணிகள் நடக்கும் 5 நாட்களும் கண்ணாடி பாலத்துக்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பாலம் திறந்து சில மாதங்களே ஆன நிலையில், கண்ணாடி இழப்பாலம் பராமரிப்பு பணிக்காக தடை விதிக்கப்பட்ட அறிவிப்பு சுற்றுலா பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கண்ணாடி பாலத்தின் நுழைவு வாயி லில் கயிறுகள் கட்டி தடுப்பு கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பராமரிப்பு பணிகள் நடப்பது தொடர் பாகவும், அதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறித்த அறிவிப்பும் பாலத்தின் நுழைவு பகுதியில் வைக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை மட்டும் சுற்றி பார்த்துவிட்டு திருவள்ளுவர் சிலைக்கு கண்ணாடி பாலம் வழியாக நடந்து சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.