திருத்தணி

ங்குனி  உத்திரத்தை முன்னிட்டு திருத்தணியில் இன்று அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

தமிழகத்தின் வடக்கு எல்லையாக விளங்கும் திருத்தணி.முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடு ஆகும்;.ட்திருத்தணி என்பது தேவர்களுக்குத் தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர்புரிந்து, கோபம் தணிந்து அமர்ந்த தலம் மற்றும் தேவர்கள் பயம் நீங்கிய இடம்.

இத்தலம் 600 ஆண்டுகளுக்கு முன்பே புகழ்பெற்று இருந்திருக்கிறது. 1000 ஆண்டுகளுக்கு முன்பே பல்லவ, சோழ மன்னர்களால் இத்தலம் போற்றப்பட்டுள்ளது என தெரிகிறது.பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், வடலூர் ராமலிங்க அடிகள், கந்தபைய தேசிகர், கச்சியப்ப முனிவ கச்சியப்ப சிவாச்சாரியார் மற்றும் அருணகிரிநாதர் முதலிய சான்றோர்கள் திருத்தணி முருகனை பெரிதும் புகழ்ந்துள்ளனர்.

திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகப் பெருமானை தரிசித்து செல்கின்றனர். இன்று முருகனுக்கு உகந்த நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் இதற்கான முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.  இன்றையபங்குனி உத்திரத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் அதிகாலை 3 மணி முதல் பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருத்தணி மலைக் கோயிலுக்கு செல்வதற்கு அனைத்து வாகனங்களுக்கும் இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.  ஆயினும் பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் திருத்தணி பேருந்து நிலையம் அருகே உள்ள தணிகை இல்லத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.