சென்னை

யில்வே போலீசார் பெண் பயணிகள் பாதுகாப்புக்காக வாட்ஸ் அப் குழு ஒன்றை உருவாக்க உள்ளனர்.

பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையில் ஒருபகுதியாக, வழக்கமாக ரெயில்களில் பயணிக்கும் பெண் பயணிகள் கொண்ட ஒரு ‘வாட்ஸ் அப்’ குழுவை உருவாக்க தமிழக ரெயில்வே போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பெட்டிகளில் பெண் பயணிகளின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகிறது. அண்மக்யில் கோவையில் இருந்து திருப்பதி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்கள் பெட்டியில் பயணித்தகர்ப்பிணி பெண்ணை அந்த பெட்டியில் ஏறிய வாலிபர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்து அவரை ரயிலில் இருந்து கீழே தள்ளினார். அந்த கர்ப்பிணி பெண் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் போலீசிடம் செயின் பறித்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  தற்போது இரவு 10 மணிக்கு பின்னர் புறப்படும் ரயில்களில் ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் (ஆர்.பி.எப்.) இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மின்சார ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகள், சிறு தொழிலில் ஈடுபடும் திண்பண்ட வியாபாரிகள், வேலை நிமித்தமாக தினமும் பயணிக்கும் பெண்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து பகுதி வாரியாக புதிய வாட்ஸ் அப் குழுவை தொடக்க ரயில்வே போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்த குழு பெண் பயணிகளுக்கு ஏற்படும் தொந்தரவு, செல்போன் மற்றும் செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய பயன்படும் என ரயில்வே போலிசா தெரிவித்துள்ளனர்.