சென்னை:  எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி என  சர்வதேச தாய்மொழி நாளையொட்டி மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சர்வதேச தாய்மொழி தினம் இன்று (பிப்ரவரி 21) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தமிழர்களின் தாய்மொழியான தமிழ்மொழி குறித்து பகிர்ந்துள்ளார். அதில்,

எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி! இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்!

அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி! உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி! என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் மறைந்த முதல்வர் கருணாநிதி எழுதிய உலக தமிழ்ச்செம்மொழி மாநாட்டின் மையநோக்க விளக்க பாடலையும் பகிர்ந்துள்ளார்.