சென்னை: கோடைகால மின் தேவையை சமாளிக்க தனியாரிடம் இருந்து 8,525 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில், மின்சார தேவை அதிகரிக்கும் என்பதால், அதை சமாளிக்க தனியார் மின் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்த 8525 மெகாவாட் மின்சாரத்தை வெளி சந்தையில் இருந்த வாங்க தமிழ்நாடு மின்சார ஒங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மின்சார பயன்பாடு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மின் கட்டணங்களும் அதிகரித்துள்ளது. இதனால், திமுக அரசு தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிபடி, மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரி வருகின்றன. தற்போது கோடைக்காலம் பிறங்நதுள்ளதால், மாநிலத்தின் மின்சார பயன்பாடு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தமிழ்நாட்டுக்கு தேவையான மின் தேவையை ஈடு செய்யும் வகையில், வெளி சந்தையில் இருந்து மின்சாரம் வாங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, . இந்தாண்டு கோடை காலத்தில் தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை 22,000 மெகாவாட்டுக்கு மேல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறும் மின்சார வாரியம், இதை ஈடு செய்ய குறுகிய கால ஒப்பந்தங்களின் அடிப்படையில் வெளி சந்தையில் இருந்து மின்சாரம் வாங்க முடிவு செய்துள்ளது.
இதன்படி, பிப்ரவரி முதல் மே மாதம் வரையில் நள்ளிரவு 12 மணி முதல் மாலை 6 வரையிலான மின் தேவையை சமாளிக்க 2750 மெகாவாட் மின்சாரமும், பீக் ஹவர்ஸ் என்று அழைக்கப்படும் மாலை 6 மணி இரவு 12 மணி வரை 5775 மெகாவாட் மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் முடிவு செய்துள்ளது.
அதன்காரணமாக, தேவைப்படும் மின்சாரத்தை கொள்முதல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மனு தாக்கல் செய்து இருந்தது. இதை பரிசீலனை செய்த ஆணையம் இந்த மின்சாரத்தை கொள்முதல் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.