துரை

துரை தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அர்ச்சகர்கள் பக்தர்கள் தட்டில் போடும் காணிக்கையை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை தண்டாயுதபானி சுவாமி கோவில்  செயல் அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,

”மதுரை நகர், நேதாஜி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் அர்ச்சகர்களின் தட்டில் பக்தர்களால் போடப்படும் காணிக்கையினை உண்டியலில் செலுத்த உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு அர்ச்சகர்கள் தட்டில் வரப்பெறும் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தும் பணியினை திருக்கோவில் மணியம் மற்றும் காவலர்கள் கவனித்தல் வேண்டும் எனவும், தட்டு காணிக்கையை உண்டியலில் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை தண்டாயுதபானி சுவாமி கோவில் செயல் அலுவலரின் இந்த சுற்றறிக்கையால் அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.