டெல்லி

டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா கூகுள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

முன்னணி நடிகர்களின் முக்கியமானவரான அமிதாப் பச்சனை போல் அவரது மகன் அபிஷேக் பச்சனும் இந்தி சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இவர் கடந்த 2007-ம் ஆண்டு நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்ற ஒரு மகள் இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா உடல்நலம், மனநலம் குறித்து கடந்த சில வருடங்களாகவே சர்ச்சைக்குரிய வகையில் செய்திகள் வெளியாகி வருகின்றன. யூடியூபிலும் சில வீடியோக்கள் இவர் குறித்து வெளியானது குறிப்பிடத்தக்கது.  ஏற்கனவே ஆராத்யாவின் உடல்நலம் மற்றும் மனநலம் குறித்து தவறான தகவல்கள் வெளியிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆராத்யா பச்சன் சமீபத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ஊடகங்களில் தன்னை பற்றி தவறான தகவல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி குறிப்பிட்டிருந்தார், மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஆராத்யா பச்சன் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க, கூகுள், மற்றும் யூடியூப் சேனல்களுக்கு உத்தரவிட்டுள்ளது.