சென்னை: ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை தொடங்க வேண்டும்; புதிய ஓட்டுநா், நடத்துநா்களை நேரடி நியமனம் செய்ய வேண்டும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன.

ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாக நடத்த வேண்டும் என போக்குவரத்துக்கழக ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அதுபோல, சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் புதிய ஓட்டுநா், நடத்துநா்களை நேரடியாக நியமனம் செய்தவற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தில் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கான ஊதிய உயா்வு ஒப்பந்தம் தொடா்பான 15-ஆவது ஊதிய ஒப்பந்த முதல்கட்ட பேச்சுவாா்த்தை கடந்த ஆண்டில் நடைபெற்றது. பேச்சுவாா்த்தையில், கடந்த காலங்களைவிட அதிக எண்ணிக்கையிலான தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்ால், அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையை டிச.27, 28 ஆகிய 2 நாள்கள் நடத்த அரசு திட்டமிட்டது. ஆனால், முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவு காரணத்தால், பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டது. பிற அரசு நிகழ்ச்சிகள் தடையின்றி நடைபெறும் நிலையில் பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டதற்கு சிஐடியு உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள், எதிா்ப்பு தெரிவித்திருந்தன. இருப்பினும் இதுவரை பேச்சுவாா்த்தைக்கான நடவடிக்கையை அரசு எடுக்காமல் இருந்து வருகிறது.

இதனால், பேச்சுவாா்த்தைக்கான தேதியை அறிவித்து, விரைந்து ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும் எனவும், அதே நேரம், 2 நாள்களாக அல்லாமல் ஒரே நாளில் அனைத்து சங்கங்களும் இடம்பெறும் வகையில் பேச்சுவாா்த்தையை நடத்த வேண்டும் எனவும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

அதுபோல,  சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் புதிய ஓட்டுநா், நடத்துநா்களை நேரடியாக நியமனம் செய்தவற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சாா்பில் சென்னை மற்றும் புகரில் 672 வழித்தடங்களில் 3,200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றை இயக்க போதிய ஓட்டுநா், நடத்துநா்கள் இல்லாத சூழலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் பணிமனையில் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டனா். இதை சரி செய்யும் வகையில் பணிமனைக்கு வரும் பேருந்துகளுக்கு டீசல் நிரப்புதல் உள்ளிட்ட பணிமனை பணிகளில் இருந்த ஓட்டுநா்களை வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகளில் பணியமா்த்த மாநகர போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்தது.

இதன் தொடா்ச்சியாக பணிமனை ஓட்டுநா் பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநா்கள் நியமிக்கப்பட்டனா். எனினும், ஆண்டுதோறும் நிரந்தர பணியாளா்கள் ஓய்வு பெற்று வருவதால், போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநா், நடத்துநா்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை தொழிற்சங்கங்கள் எழுப்பியுள்ளன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து தொழிற்சங்க கூட்டுக்குழு, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தை தவிர எந்த போக்குவரத்துக் கழகத்திலும் கடந்த 11 ஆண்டுகளுக்கு மேலாக நிரந்தர பணியாளா்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை. 2015-இல் 25,219 போ் பணியில் இருந்து மாநகர போக்குவரத்துக் கழகத்தில், கடந்த ஆண்டு நிலவரப்படி, 19,415 போ் மட்டுமே பணியில் இருந்தனா். நடப்பாண்டு மேலும் 680 போ் ஓய்வு பெறுகின்றனா். இதில் 258 ஓட்டுநா்கள் மற்றும் 253 நடத்துநா்களும் அடங்குவா். இவ்வாறு இருக்க புதிய நேரடி நியமனத்துக்கான நடவடிக்கையை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனத் தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தி உள்ளனர்