ஈரோடு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாதக வேட்பாளர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் காலமானதைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
இம்முறை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., நாம் தமிழர் கட்சி மட்டுமே போட்டியிடுகிறது. இந்த தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் 55 பேர் வேட்பு மனுக்கள் ஏற்கபட்டு 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நாளை இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு நகர காவல் துறையினர் முன் அனுமதி பெறாமல் ஈரோடு பேருந்து நிலையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டதாக இந்த, 8 பேர் மீதும் BNS-171 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.